Monday 21 April 2014

விஜய் டிவி-கிறிஸ்தவ மாபியா


ஸ்டார் விஜய் டிவி முதலாளி ரூபெர்ட் முர்டோக். இவர் உலகில் மக்கள் திகம் படிக்கும் செய்தி நிறுவனமான நியூஸ் கார்ப், பாக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் முதலாளியும் ஆவார். இவர் ஒரு கிறிஸ்தவ மதம் பரப்பி. பைபிள் மற்றும் மத மாற்ற புத்தகங்களை அதிக அளவில் அச்சிட்டு விநியோகிக்கும் கம்பெனியின் முதலாளி ஆவார். ஸ்டார் விஜய் டிவி கிறிஸ்தவர், கிறிஸ்தவ ஆதரவாளர் அல்லது இந்து மத எதிர்ப்பாளர்கள் போன்றவர்களையே முன்னிறுத்தும். இந்து மத விரோத சித்தாந்தகளை மறைமுகமாக ஸ்டார் விஜய் தொலைகாட்சி பரப்பி வருகிறது. இவர்கள் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கவில்லை. இந்திய சமூக, கலாசார, வரலாற்று கூறுகளை திரித்து, மக்களை குழப்பி, மீன் பிடிக்க பார்க்கிறார்கள். இதற்கு கம்யுனிஸ, முற்போக்கு தீய சக்திகளும் கூட்டு. சில இயக்கங்கள் தமிழ்/தமிழ் முறை என்ற அடைமொழியை சேர்த்துக்கொண்டு தமிழ் கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் துளியும் சம்மந்தமில்லாததும், விரோதமும் ஆன விஷங்களை பரப்புகின்றன. 



இதுபோன்று இந்தியாவுக்குள் மேற்குலக கலாச்சாரத்தை பரப்ப கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது ஸ்டார். இவர்கள் கிறிஸ்தவ மதத்திலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மதத்தை வைத்து வியாபாரம் செய்கிறார். கிறிஸ்து விரோதமாக பல நடவடிக்கைகளை மறைமுகமாக கையாளுகிறார் என்ற குற்றச்சாட்டு மிக பலமாக ஏற்ப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை ஆட்டி வைத்து பல போர்களில் முஸ்லிம்களை கொன்று குவிக்க செய்ததன் பின்னணியிலும் இந்த ரூபர்ட் முர்டாக் இருந்தார் என்ற குற்றச்சாட்டும் அமெரிக்க முழுக்க பலமாக எழுந்துள்ளது. அதை பல பத்திரிக்கைகளும் பிரசுரித்துள்ளன. ஆதாரங்கள் கீழே,






உங்கள் குடும்பத்தை காத்துக்கொள்ள வேண்டுமானால் அந்த சேனலை புறக்கணியுங்கள். அது கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி. ஏனெனில், இவர்கள் பரப்பும் மேற்குலக வாழ்க்கை முறை எந்த மதத்திற்கும் ஏற்புடையதல்ல. மனித சமூகத்துக்கே விரோதமானது.

விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கிறிஸ்தவ சிந்தனைகளை நம் மனதில் விதைப்பன. விஜய் டிவியில் இந்திய பண்பாட்டு விரோத-கிறிஸ்தவ சார்புடைய கருத்துக்களே அதிகம் வரும்.

Wednesday 16 April 2014

கம்யூனிஸ லாபி-உண்மை முகம்

என்னதான் முரண்பாடுகள் இருந்தால் ஜெயமோகனிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மை பிடிக்கத்தான் செய்கிறது. ஜோடிகுரூஸ்க்கு ஆதரவாக வெளியிட்ட பதிவில் (http://www.jeyamohan.in/?p=49053, ஆதரவோடு பல உண்மைகளையும் சொல்லியுள்ளார். ஏற்கனவே ஆய்வுலகின் அந்நிய கரங்கள் (http://www.jeyamohan.in/?p=28449என்று அவர் எழுதிய கட்டுரை இதை தொட்டு சென்றதுதான்.

கம்யுனிஸ்ட்கள் என்றால் உண்டி குலுக்கி, பந்த் செய்து வேலையை கெடுக்கும், மக்கள் ஆதரவற்ற சிறு கும்பலாகத்தான் தமிழக மக்களுக்கு தெரியும். ஆனால் சுதந்திரம் முதற்கொண்டு அவர்களின் சிந்தனை-சித்தாந்தமே நம்மை ஆண்டு வருகிறது. நம் சட்டம்-சமூகம் அவர்களின் சிந்தனையை நோக்கி திருப்ப அவர்கள் வைத்திருக்கும் ஆயுதம்தான் இந்த அறிவுலக லாபி. இந்திய எழுத்தாளர்களுக்கு எழுதி பெரும்பணம் ஈட்டலாம் என்ற நம்பிக்கை இருந்ததில்லை/இருப்பதில்லை. இது பொருளீட்டுவதற்கு சரியான துறை அல்ல என்பதை நன்றாகவே பெரும்பான்மை எழுத்தாளர்கள் புரிந்து வைத்துள்ளனர். எழுத்தாளர்களின் நோக்கம் அவர்களுக்கான ஒரு களம்-மேடை-அங்கீகாரம் அவ்வளவுதான். அதாவது, அவர்களின் எழுத்து, சிந்தனை வெளிவர பத்திரிகை, பதிப்பகம், டிவி ஆகிய களம்; அவர்களை மக்கள்முன் அறிவாளி என்று அறிமுகம் செய்து முன்னிறுத்தும் கருத்தரங்கம், விழாக்கள், டிவி விவாதங்கள், பேட்டிகள் உட்பட்ட மேடைகள்; அவர்களின் சிந்தனைகளை அங்கீகரிக்கும் விருதுகள், பட்டங்கள், சர்வதேசிய அறிமுகங்கள், மொழிபெயர்ப்புக்கள் ஆகிய அங்கீகாரம். தேசிய அளவில் கம்யுனிஸ லாபி இந்த மூன்றையும் கைப்பற்றி வைத்துள்ளது. எனவே ஒரு எழுத்தாளன் சிந்தனையாளன் தனது துறையில் வெற்றி பெற வேண்டுமானால் கம்யுனிஸ சிந்தனையை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற திணிப்பு உள்ளது. இல்லையேல் அவன் மரத்தடி ஜோசியன், தேங்காய்மூடி வக்கீல் போன்ற தாழ்வான பார்வையை பெறவேண்டும். இந்த லாபியே காலப்போக்கில் பத்திரிகை, சினிமா துறைகளையும் ஆக்கிரமித்து தற்போது கிராமிய கலைஞர்கள் வரை விஸ்தரித்து சென்று கொண்டிருக்கிறது. எதார்த்தத்தை பிரதிபலிக்காமல் சமூகத்தின் வாழ்வோட்டதிற்கும், நம்பிக்கைக்கும் புறம்பான செய்திகளையும் மனோநிலையையும் தருகிறது. இதனால் தான் பல அறிஞர்கள் டிவி, சினிமா, பத்திரிகை போன்றவற்றை பார்க்கவோ, நம்பவோ வேண்டாம் என சொல்கிறார்கள்.

ஒரு தேசத்தை எப்படி மூளைசலவை செய்வது என்று ரஷ்ய முன்னாள் நுண்ணறிவு  ஏஜென்ட் வெளிப்படுத்துகிறார்.. இதுதான் இந்தியாவில் நடக்கிறது..


குருமூர்த்தி அவர்கள் கம்யுனிஸ்ட்கள் பற்றியும் இந்திய சமூகம் பற்றியும் பேசிய பகுதிகள்..


மெக்காலே கல்வி முறையை மட்டுமே நாம் விமர்சிப்பது தவறானது. பள்ளியில் கற்பதை விட வெளியில் நாம் கற்பதே அதிகம். வெளியில் நம் அறிவுதேடலில் கிடைக்கும் அனைத்துமே கம்யுனிஸ கறைபடிந்துள்ள போது மெக்காலே மட்டுமே குற்றவாளி என்று எப்படி சொல்வது? கம்யுனிஸத்தின் தனியுடமை சொத்தாக மாறிப்போன இந்திய அறிவுலகம் மீட்கப்படாவிட்டால் அடுத்த தலைமுறை தானாக சீன-ரஷ்ய ஆணைகளுக்கு அடிபணியும் சமூகமாக மாறும்.

கம்யூனிஸ்ட்கள் காலை சுற்றும் நச்சுப்பாம்புகள் என்ற தலைப்பில் வேத விஞ்ஞான ஆய்வு மையம் வெளியிட்ட சிறு நூல்.

கம்யூனிசம் குறித்த மற்றுமொரு நல்ல பதிவு.

இவ்வளவு செய்பவர்கள் ஏன் ஆட்சி பிடிக்கவில்லை/இயலவில்லை என்றால், காரணம், இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் பாரத மக்களின் தர்ம நெறிதான். அதோடு கம்யுனிஸ்ட்களுக்கு ஆட்சியை விட, கம்யுனிஸ்ட்களின் தாய்நாடாகிய ரஷ்ய-சீன அரசுகளின் கையசைவிற்கு இந்தியா தலையசைக்கும் சூழலை உருவாக்கி வைப்பதே முதன்மையான நோக்கமாகும். இந்திய சமூகத்தையே தங்கள் பாரம்பரியத்தை வெறுக்கும், பிரிவினைவாதத்தை தூண்டும், தன்னை தானே தாழ்வானவர்களாக கருதச்செய்யும், பாரம்பரியத்தை அழிக்கும் சமூகமாக மாற்ற விளைவதே இவர்கள் முன்னிறுத்தும் “சமூக மாற்றம். அந்த சமூக மாற்றம் நடந்துவிட்டால் சுலபமாக சீனாவில் நாடாகும் அடக்குமுறை ஆட்சியை அமுல்படுத்தி விடலாம். இவற்றை ஏற்பவனே எழுத்தாளன், அவன் சிந்தனைகளே சிறந்தது, அவனே அறிவாளி, அதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஏமாளியே தியாகி, அதற்கான கலவரங்களில் ஈடுபடுபவனே பெருவீரன். சே குவேரா, ஸ்டாலின், மார்க்ஸ் போன்றோர் படங்கள், புத்தகங்கள் மற்றும் இறந்தால் சிவப்பு கொடி போன்றவை தாராளமாக தரப்படும். எதிர்ப்பு திறம்படவும் பலமாகவும் இருந்தால் அவர்களை ‘அப்புறப்படுத்த தனி மாபியாக்களும் உண்டு. சந்தர்ப்பங்களை பொருத்து இஸ்லாமியர், கிறிஸ்தவ மிஷனரிகள், காங்கிரஸ் என இவர்களின் கூட்டணிகள் விரியும். திராவிடமே இவர்கள் சிந்தனையில் கலப்படம் ஏற்ப்பட்ட கருத்துதான்.சொந்தமாக சிந்திக்கும் அளவு ஈவெராவுக்கு அவ்வளவு அறிவு கிடையாது. இந்தியாவில் கம்யுனிஸ்ட்களாலும் பிறகு ரஷ்யாவிலும் கொடுக்கப்பட்ட பயிற்சியின் விளைவுதான் திராவிட கொள்கைகள்-அதாவது திராவிட டப்பா, உள்ளே கம்யுனிஸ குப்பை.


ரஷ்யாவில் ராமசாமி நாய்க்கர் 


கம்யூனிச கட்சி நிறுவனர் M.N.ராய் உடன் ராமசாமி நாய்க்கர்
இந்த கம்யூனிச சிஷ்யன் ராமசாமி நாய்க்கர் நமக்கு எப்படி கதாநாயகனாகவும், தந்தையாகவும் (!!), பெரியாராகவும் ஆக்கப்பட்டார். அவரின் உண்மை முகம் என்ன..??

பெரியாரின் மறுபக்கம்:


அப்படித்தான் கம்யுனிஸ சித்தாந்தம் நன்மை செய்யுமா என்றால், அவர்கள் ஆட்சி செய்யும் தேசங்களை கண்டாலே தெரியும். இவையனைத்தையும் பலரும் பல காலங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த கூட்டுக்குள் சிக்கி தப்பிய பலரும் கம்யுனிஸ்ட்களை துகிலுரித்து காட்டியுள்ளார்கள்.

உலகளவில் கம்யூனிசம் ஏற்ப்படுத்திய அழிவு பற்றிய தொகுப்பு நூல்.. மிகவும் புகழ் பெற்றது..

கம்யூனிசம் என்பது ஒரு இரவில் எழுதப்பட்ட அரைவேக்காட்டு தத்துவம் என்பதும்.. அதை எழுத தூண்டியதே முதலாளிகள் என்பதும்.. அதன் காரணம், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சூது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்..??






Friday 11 April 2014

அபத்தம்

சமீப காலமாக ஒரு வியாபார கூட்டம் கிளம்பியுள்ளது. இயற்கை வாழ்வியல் இயற்கை வேளாண்மை இயக்கங்கள் என்ற போர்வையில்.. நம்மாழ்வாரின் படத்தை முன்னாள் வைத்துக்கொண்டு வியாபாரம்  கொடிகட்டி பறக்கிறது. இவர்கள் என்.ஜி.ஓ க்கள். பல நிதி ஆதாரங்களையும் நன்கொடைகளையும் வாங்கிக்கொண்டு அதற்கு மேல் அவர்கள் செய்யும் காரியங்களுக்கும் மக்களிடம் ப்ரீமியம் ரேட்டில் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். இதை விவசாயிகளே செய்தால் கூட பரவாயில்லை; ஆனால் இவர்கள் இடைத்தரகர்கள் போல.

ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட் போட்டுக்குவாங்க... ஆனா, அவங்க பத்திரிகைகள்'ல மறை நீர் (Virtual Water) பற்றி பக்கம் பக்கமா எழுதுவாங்க..  கைத்தறி வெள்ளை வேட்டி கட்ட சொன்னா கசக்கும்..  தினமும் எதோ ரூபத்துல அரைகிலோ வெள்ளை சர்க்கரை சாப்பிடுவாங்க.. தினமும் அசைவம் இல்லாம சோறு இறங்காது.. இயற்கை இயற்கை னு பச்சை கலர்ல பிளக்ஸ் வைப்பானுங்க.. இயற்கை பொருட்கள் கம்பெனி னு கார்பரேட் பூதத்தை உருவாக்குவாங்க.. இவங்க தான் இயற்கைய காப்பாத்தராங்களாம்..!

இயற்கை மருத்துவம், மருந்துகள் னு எழுதுவாங்க; பசு பொருட்கள் மூலம் உருவாகி வரும் நூற்றுக்கணக்கான மருந்துகள் பற்றி எழுதாமல் இருட்டடிப்பு செய்வாங்க... இயற்கை வேளாண்மை னு முழங்குவாங்க... ஆனா இயற்கை வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம் என அனைத்துக்கும் ஆதார சக்தியான நாட்டு பசுக்களின் நிலை  பற்றியோ, அதை தடுப்பதை பற்றியோ, பேச மாட்டாங்க.. ஏன்னா, இவங்களோட பண்ணாட்டு மாபியா தொடர்பு.. அரசியல் சக்திகள் இவர்களை இயக்குது.. மாட்டை பற்றி பேசினா முஸ்லிம்-கம்யுனிஸ-காங்கிரஸ் லாபி ஏத்துக்காது.. அதை மறைக்க ஹிந்துத்துவானு எதிர்முழக்கம் தருவாங்க.. ஏண்டா, நம்மாழ்வார் போட்டோ வச்சு வியாபாரம் பண்றீங்க, நம்மாழ்வார் ஒருமுறைகூட சொல்லலியா நாட்டு பசுக்கள் முக்கியம்னு?? காப்பாத்தாட்டியும் பரவால்ல.. இவனுங்க மாட்டுக்கறி மற்றும் அசைவ உணவுகளை உணவு திருவிழா னு போடுவானுங்க.. கொடுமை..!



வாரம் ரெண்டு புக் வெளியிடுவாங்க... விலை நூறு இருநூறு இருக்கும்.. சேவை னு வந்தப்புறம் ஏண்டா எதை தொட்டாலும் பெரிய காந்தி நோட்டா முழுங்கறீங்க..? இதுக்குத்தான ஸ்பான்சர் னு விவரம் தெரியாத பண்ணை கோழிகளான ஐடி  கூட்டத்தை பிடித்து வைத்திருக்கீங்களே.. பதிப்பிக்கிற விசயங்களை நீங்களே கண்டுபிடிச்சீங்களா?? களத்தில் மக்களிடம் சேகரிச்ச விஷயம் தான?? எல்லா செலவையும் ஸ்பான்சர் கிட்ட வாங்கிய பின் எதுக்குடா நூறு இருநூறு?? பதிப்பிச்ச விலையில் விக்கலாமில்ல?? எல்லாருக்கும் போய் சேருமில்ல??

அப்புறம் விதை வியாபாரம்.. அது இதுக்குமேல..

உண்மையில் இவர்களில் வியாபாரிகள் தான் அதிகம்.. ஆற்றாமை, இயலாமை, சூழல் போன்ற காரணங்களால் முழுமையான இயற்கை முறை, கிராமிய வாழ்க்கைக்கு திரும்ப முடியாது மன அழுத்தத்தில் இருக்கும் சிறுவர்களிடம் பணம் பிடுங்கி, தங்களது அரசியல் ஆட்பிடிப்பு வேலை, மறைமுகமாக சித்தாந்த திணிப்பு வேலைகளை செய்வதுதன் இந்த நவீன "இயற்கை செயல்பாட்டாளர்கள்" "தற்சார்பு வாழ்க்கை போதகர்கள்" "தமிழர் வாழ்வியல்" என பல்வேறு முகமூடியில் சுற்றுபவர்கள்..

இவர்களின் வியாபாரத்தில் எந்த ஒரு ஏழை குடியானவனும் பங்கேற்க முடியாது. அவ்வளவு காஸ்ட்லி. பின் யாருக்குடா டீ ஆத்துறீங்க??

நம்மாழ்வார், ஆர்கானிக், இயற்கை, தமிழ்முறை போன்ற பிராண்டுகள் வியாபாரத்தை புறக்கணியுங்கள். எந்த இயக்கத்தின் பின்னாலும் போகாதீர்கள். இயக்கங்கள் நம்மை அடகு வைக்க ரொம்ப காலம் ஆகாது. உங்கள் பணத்தை இந்த பன்றிகளை வளர்க்க வீணடிக்காதீர்கள்.

இயற்கை, கிராமங்கள், பாரம்பரியம் பேணப்பட வேண்டும் என்பதில் துளியும் மாற்றுக்கருத்தில்லை. அதே சமயம், மக்களின் இந்த மனமாற்றத்தை காசாக்கவும், ஒட்டாக்கவும், மீண்டும் இதே கார்பரேட் குப்பையில் சிக்கவைக்கவும் கூலிப்படை பசுமை போராளிகள் என்றும், பூமியின் நண்பர்கள் என்றும் பல ரூபத்தில் சுற்றுவதுதான் விஷயம். உண்மையில் நல்லது செய்ய நினைத்தால் முதலில் மனதளவில் நீங்கள் பாரம்பரிய சூழலுக்கு மாறுங்கள்; உங்களுக்கு தேவையானதை நீங்களே விளைவிக்க முயற்சி செய்யுங்கள்; Slow food-Local Food-Native food-Native Life என்று மாறுங்கள்.. இயற்கையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளுங்கள்; கிராமங்கள் கிராமமாக வாழ, நகரமயமாகாமல் தடுக்க களத்தில் உங்களை சுற்றி உள்ள சமூகத்தில் வேலை செய்யுங்கள். அப்படி வாழ்வதற்கான சூழலை/சந்தையை உருவாக்குங்கள்; கிராமிய பாரம்பரிய வாழ்க்கையின் அடிப்படைகளை, சுதேசியை, சனாதனத்தை, தற்சார்பை, புரிந்து அவற்றை பலப்படுத்த வேலை செய்யுங்கள்.


Wednesday 15 January 2014

நம்மாழ்வார் - கம்யுனிஸ்ட்களின் சிம்ம சொப்பனம்




நம்மாழ்வார் அவர்கள் எந்த வித சித்தாந்த தாக்கமும் இல்லாதவர். ஆரம்பத்தில் அவர் வளர்ந்த சூழல் ஏற்ப்படுத்திய திராவிட/கம்யுனிஸ தாக்கம் அனிச்சையாக பல இடங்களில் வெளிப்பட்டாலும், அவற்றின் தீமைகளை உணர்த்து தன்னை பல வகையிலும் திருத்தி அவற்றின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். எல்லா கட்சியிலும் உள்ள நண்பர்களோடு நல்ல முறையில் பழகினார். இருப்பினும் ஐயாவின் சேவைகளால் அதிக பாதிப்பை சந்தித்தது கம்யுனிஸ சித்தாந்தம்தான். நம்மாழ்வாரின் வாழ்வே கம்யுனிஸ பிழைகளை எதிர்த்து போராடுவதாகத்தான் இருந்தது.

• அடிப்படையில் காரல் மார்க்ஸ் இந்திய கிராமங்கள் சார்ந்த பொருளாதார சமூகம் உடைக்கப்பட வேண்டும் என்று காலனிய ஆட்சி காலத்திலேயே எழுதினார். எந்த நாட்டில் பிறந்தாலும் கம்யுனிஸ்ட்களுக்கு ரஷ்யா தான் தாய் நாடு. அதுதவிர பிற நாடுகள் அனைத்தும் நரகமே. அனைத்தும் அழிந்து ரஷ்யாவின் பின்னால் நிற்க வேண்டும் என்பதே அவர்களின் சமூக கலாசார பொருளாதார கொள்கைகளின் அடிநாதமாக இருக்கும். ஆனால் நம்மாழ்வார் அவர்கள் வாழும் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார். கிராமிய வாழ்வியலை சிலாகிக்க செய்தார். கிராமங்களை மையப்படுத்திய பொருளாதாரம் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தினார். இது கம்யுனிஸ்ட்களுக்கு மிளகாயை கில்லி வைத்தது போல இருந்தது. (ஆதாரம்: British Rule in India-Karl Marx)

• கம்யுனிஸ அடிப்படைவாதிகள் இயற்கை விவசாயமே மக்களுக்கு பயன் தராது என்றும், தேவையற்றது என்றும் கருத்தெழுதி வந்தனர். சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதும் தேவையற்றும் என்று கூறினர். இதை கட்டுரைகளாக எழுதி வந்தனர். ஆனால் அவர்கள் வாதங்களை பொய் என்று நிரூபித்து உடைத்து வாழ்ந்து காட்டினார் நம்மாழ்வார் ஐயா.

• பாரம்பரியம் என்ற சொல்லையே கம்யுனிஸ்ட்கள் வெறுத்தனர். முன்னோர்கள் என்றால் எதுவும் தெரியாத, முட்டாள்தனமான அரக்கர் கூட்டம் என்ற பிம்பம் ஏற்படுவதையே விரும்பினர். ஆனால் நம்மாழ்வார் ஐயா காலையில் துவங்கும் யோகப்பயிற்சி, உணவு முதல் வீடு, மருத்துவம், பொழுதுபோக்கு என அனைத்திலும் பாரம்பரிய வேர்கள் நமக்கு எவ்வளவு பெரிய செல்வத்தை சேர்த்து தந்துள்ளது என்பதை எடுத்துசொல்லி முன்னோர்கள் மீதும் பாரத பாரம்பரியத்தின் மீதும் பெரும் பற்று எற்படும்படி செய்தார். (ஆதாரம்: பூவுலகின் உணவரசியல் - கீற்று கட்டுரை)

• கடவுள் மறுப்பு கொள்கையுடைய திராவிடத்தை ஈன்ற தாய் கம்யுனிசம். ஆனால் நம்மாழ்வார் ஒவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் ஓம் என்று கூறுவதும், இயற்கை வழிபடுவதையும், காவி வேஷ்டி கட்டுவதையும், தினமும் காலை யோகா, பிராணாயாமம், தியானம் செய்வதையும் கம்யுனிஸ்ட்கள் சகித்துக்கொள்வார்கள் என்று நினைக்க இடமில்லை. 

• பசுக்கள் தான் விவசாயத்தின் - கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதால், தனது கூட்டங்களில் ஓரிரு வார்த்தைகளாவது பசுக்கள் கேரளா செல்லும் அவலத்தையும், பசுக்களை காக்க வேண்டிய அவசியத்தையும், நாட்டு பசுக்களின் பஞ்சகவ்யத்தின் அருமைபெருமைகளை கூறுவார். நாட்டு பசுக்கள் எண்ணிக்கையில் வீழ்ந்து தற்போது தன்னார்வலர்கள் முயற்சியால் மீண்டு வரும் வேளையில், நாட்டுமாடுகளை கொன்று திண்ணுவதும் பாரம்பரியம் தான் என்றும் அதை பாரம்பரிய உணவு விழாவில் ஏன் வைக்கவில்லை என்ற அற்ப வாதங்கள் செய்தவர்கள் இந்த கம்யுனிஸ்ட்கள். அதோடு கம்யுனிஸ்ட்கள் மாட்டுக்கறி தின்பதை நியாயப்படுத்தி கவிதைகள் கட்டுரைகள் எழுதி பரப்பினர். தனது சொந்த வாழ்விலும் நாட்டுபசு மருந்துகளின் மகத்துவத்தை உணர்ந்தவராதலால், அவரை சோர்வடையச்செய்ய கம்யுனிஸ்ட்கள் வீசிய ஆயுதங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தார்.